PACL பற்றி முதல்வரிடம் எப்படி சொல்லுவது

ஐயா வணக்கம்!

ஜெய்பூரை தலையிடமாகக் கொண்ட PACL நிதி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் சுமார் 5.75 கோடி மக்கள் பணத்தை செலுத்தி, தற்போது திரும்ப கிடைக்கப்பெற முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முகவர் முதல், முதலீட்டாளர் வரை 7, வருடங்களாக, மனதளவில் பாதிக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு இடைேயே வாழ்ந்து(?) வருகிறோம்,

பலமுறை, பலவகைகளில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எங்கள் குறையை காதுகொடுத்து கேட்கவோ எங்கள் கண்ணீரை துடைக்கவோ யாரும் முன்வரவில்லை,

இந்நிறுவனத்தின் சொத்துக்கள் பெரும்பாலும் நிலங்களாக தமிழ்நாட்டில் உள்ளது. அதனை விற்று விரைவில், “PACL முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்து,

ஏழை எளிய மக்களின் ஏழு அண்டுகால துயரத்தை, போக்கிடவும் எங்கள் வாழ்வில் உங்கள் நல்லாட்சியின் வழியாக விடியல் காணச் செய்ய வேண்டுமென்று, பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

(தேர்தல் பரப்புரையின்போது மனுவாக தங்கள் கவனத்திற்கு வழங்கி இருக்கிறோம், மதிப்பிற்குரிய, கனிமொழி எம்.பி அவர்களும், நமது கழக ஆட்சி வந்தவுடன், இதற்கான வழிவகை செய்யப்படும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்கள்)

இவண்:
___________ மாவட்டம் ,PACLமுதலீட்டாளர்கள் (அ) முகவர்கள்.

21 thoughts on “PACL பற்றி முதல்வரிடம் எப்படி சொல்லுவது”

  1. ஐயா
    நான் pacl என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தேன்.
    மேலும் அந்த நிறுவனத்தின்
    முகவராக இருந்தேன்.
    என்னிடம் 20 நபர்கள் சந்தா செலுத்திய இருந்தனர்.
    ஆனால் எங்களுடைய பாலிசி பணம் எதுவும் நிறுவனத்தில்
    இருந்து திரும்ப கிடைக்கவில்லை.
    தாங்கள் தான் எங்கள் தொகை திரும்ப கிடைப்பதற்கு உதவவேண்டும்.

    Reply
  2. எங்கள் தொகை திரும்ப கிடைக்க உதவ வேண்டும்.

    Reply
  3. Respected Sir
    I am the leader of 10 members eventhough the amount is not exceeding such a limit till now I didn’t receive any amount Sir
    I request you to take further steps as early as possible . Thanking you

    Reply
  4. ஐயா வணக்கம் :
    ஜெய்பூரை தலமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த PACL என்கிற நிதி நிறுவனமானது தமிழ் நாட்டிலும் 20 மாவட்டங்களில் இந்நிறுவனம் நடத்தப்பட்டது.விருதுநகர் பிரான்சில் நான் களப்பணியாளராக வேலைபார்த்து மக்களிடம் பணம் வசூலித்து (₹40,லட்சம்)வரை கட்டியுள்ளேன்.ஒவ்வொரு நாளும் பணம் கட்டியவர்கள் என்னிடம் வந்து எங்களுக்கு யாரையும் தெரியாது, எனக்கு பணத்தை நீ கொடு என்று சண்டையிடுகிறார்கள்.அதோடு மட்டுமின்றி என்னிடம் கொலை மிரட்டல், பலவந்தமாக பேசுதல் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் பெறும் மனவுளைச்சளுக்கும் ஆளாகியுள்ளேன். எனக்கென்று வீடு வாசல், காடுகரை எதுவும் கிடையாது. எனக்கென்று எந்த ஒரு உதவியும் கேட்பதைவிட என்னை நம்பி PACL நிறுவனத்தில் பணம் கட்டியவர்களுக்கு திரும்ப பணம் கிடைத்தால் மட்டுமே எனக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கும். ஐயா அவர்கள் கருணை உள்ளம் கொண்டு இக்கோரிக்கையை நிறைவேற்றினால் என்னைப்போல் களப்பணியாளர்களும் முதலீடு செய்த மக்களும் பெருமகிழ்ச்சி கொள்வார்கள் எந்நாளும் நன்றியுடனும் ,விஸ்வாசத்துடனும் இருப்பார்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .

    இவண்:
    பா. குருசாமி
    தென்காசி களப்பணியாளர்கள் மற்றும் முகவர்கள்.

    Reply
  5. Pls sir kind help me to refund the amount which I had deposited under PACL scheme in year of 2012.
    Thanx sir.

    Reply
  6. Pls sir kind help me to refund the amount which I had deposited under PACL scheme in year of 2012.
    Thanx sir. Sir please help me to return our deposited amount in PACL scheme.in the year of 2012.
    Thanks sir.

    Reply
    • ஐயா
      நான் pacl என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தேன்.
      மேலும் அந்த நிறுவனத்தின்
      முகவராக இருந்தேன்.
      என்னிடம் 20 நபர்கள் சந்தா செலுத்திய இருந்தனர்.
      ஆனால் எங்களுடைய பாலிசி பணம் எதுவும் நிறுவனத்தில்
      இருந்து திரும்ப கிடைக்கவில்லை.
      தாங்கள் தான் எங்கள் தொகை திரும்ப கிடைப்பதற்கு உதவவேண்டும்.

      Reply
  7. வணக்கம். Pacl நிறுவனத்தில் ஏஜன்டாக இருந்து நிறைய பாலிசிகளை கட்டி உள்ளேன்.பாலிசி நிறைவடைந்து அக்னாலேஜ்மென்ட் வைத்துள்ளேன் பாலிசி பணம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் 2012

    Reply
  8. ஐயா எங்கள் நியாயமான பணம் எங்களுக்கு கிடைக்க உதவி செய்யுங்கள்

    Reply
  9. எங்கள் தொகை திரும்ப கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்

    Reply
  10. Sir, plz help me …ennoda appa 2010 la fixed deposit ah ennoda marriage ku kaha 2,30,000 pottanga… Ippa en kuda enga appa illa…7 yrs time mudinchu ippa 5 yrs aguthu… Ennaku 2019 la marriage aeiruchu…ennoda Amma kastapatu interest vanki marriage panni vachanga…innum antha amount da kuda clear pannala
    …thayavu seithu intha amount ah neega engaluku vanki kudukanum… oru Ponna ennala en amma ku itha amount mattum than vanki kuduka mudiyum.. Amma voda kastatha enna la pakka mudiyala… ennoda Elder brother(age 30) oru mentally disorder person… Avanayum samalichu tu erukanga… Oru work kuda poga mudiyala avangala… relatives yarum support panna…pasurathu kuda illa …Enga la mathiri kasta paduravangaluku help pannuga sir pls…💰💰💰 Intha amount ah
    vankii kudunga sir… once again pls kindly help me sir…🙏🙏🙏

    Reply
  11. Pacl பாலிசியையும் வாங்கி கம்பனியில் சரண்டர் செய்து அக்னாலஜ்மன்டை வைத்துள்ளேன் முதலில் சரன்டர் பன்னியதற்கு பணம் கொடுத்தால் நன்றாக இரூக்கும் தாங்கள் Pacl மீது கவணம் செலுத்தி ஆவணம் செய்துதரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்

    Reply
  12. வணக்கம் ஐயா, நான் pacl நிறுவனத்தில் ஐந்து வருடத்திற்கும் மேலாக பணம் கட்டிஉள்ளேன்.நான் கட்டியுள்ள பண்ணத்தை திரும்ப வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Reply

Leave a Comment