PACL பணம் மறுபடியும் வர தொடங்கியுள்ளது

PACL money sms sebi: பணம் மறுபடியும் வர தொடங்கியுள்ளது, செபி இணையதளத்தில் பதிவு செய்த பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் முதல் கட்டமாக வங்கி கணக்கை சரிபார்ப்பதற்கு அனுப்பப்படும் 1 ரூபாய் ஆனது வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இது மே மாதம் முதலிருந்தே வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இந்த தொகையானது 10,000 ரூபாய்க்கும் குறைவான பணம் செலுத்தியவர்கள் இருப்பின்.

செபி இணையதளத்தில் பதிவு செய்து இருந்தால், அவர்களின் வங்கிக் கணக்கை சரி பார்ப்பதற்காக ஒரு ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவானவர்கள் என்று குறிப்பிட காரணம் என்னவென்றால்? தற்போது நமக்கு பெறப்படும் தகவல்கள் அனைத்துமே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலமே பெறப்படுகிறது.

pacl money sms
pacl money sms

ஒரு சிலர் மட்டுமே பிஏசிஎல் தகவலை பெறுவதற்காக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை உபயோகப்படுத்துகின்றனர்.

அவர்கள் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் வாயிலாக நமக்கு சில தகவல்கள் தெரிய வருகிறது.

இன்னும் நிறைய நபர்கள் குறிப்பாக வயதானவர்கள் தான் PACL-லில் அதிகம் பணிபுரிந்தவர்கள், ஆகையால் நிறைய நபர்களிடம் அத்தகைய வசதி மிக்க மொபைல் போன்கள் இல்லை.

PACL Sebi Money SMS

இந்த காரணத்தினால் நிறைய பேருக்கு பணம் பெறப்பட்டாலும், ஒரு ரூபாய் வரவு வைக்கப் பட்டாலும் அதற்கான தகவல் நமக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. இப்போது வந்த தகவலானது பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவானவர்கள் என்பது உண்மை.

செபி இதுபோன்ற தகவலை ஆரம்பகட்டத்தில் பகிராது என்பதும் உன்மை. முதலில் நமக்கு பணம் செலுத்தப்பட்ட பின்னேரே செபியானது செலுத்துய தொகையின் விவரத்தை இணையத்தில் பதிவிடும்.

தற்போது கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் அடிப்படையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்ட அனைவரின் வங்கி கணக்கில் மீதமுள்ள தொகை அனைத்தும் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை 10,000 திற்கும் அதிக தொகைக்கான SMS வந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த தளத்தில் உங்களுக்கு தகவல் கிடைக்கும்.

pacl money sms sebi
pacl money sms sebi

இதற்கு முன்னால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதன் அடிப்படையிலேதான் செபி பணத்தை வழங்கி வந்தது.

ஆகையால் உங்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் ஆனது உங்கள் மொபைலுக்கு வந்திருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.

SMS ஆனது நீங்கள் வங்கியில் இணைத்துள்ள மொபைல் நம்பருக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செபி PACL பதிவு சம்மந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உங்களின் பிஏசிஎல் பதிவில் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணுக்கு வரும்.

ஒருவேளை உங்கள் வங்கியில் இணைத்த என்னும் பிஏசிஎல் பதிவின்போது இணைத்த மொபைல் என்னும் ஒரே எண்ணாக இருந்தால் இரண்டு தகவலையும் நீங்கள் ஒரே மொபைல் எண்ணில் பெறமுடியும்.

அதோடு நான் இந்த தகவலை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் இந்த கொரோனா கால கட்டத்தில் செபி தன் வேலையை செய்து கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதனை தெரிய படுத்துவதன் மூலம் அவர்களும் தங்கள் வங்கிக் கணக்கை சரி பார்க்க உதவியாக அமையும் வணக்கம்.

Leave a Comment