PACL பணத்தை பெற்றது சத்தீஸ்கர் மாநிலம்..!

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் PACL நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் பல சீட்டு கம்பெனியில் பணத்தை இழந்த அனைத்து நபர்களுக்கும், சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக மக்கள் பணத்தை அம்மாநில அரசு திருப்பிக் கொடுத்தது.

இந்த தகவலை தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே பெரும்பாலான செய்திகளில் அனைவரும் தெரிந்து கொண்டு இருந்தாலும், இது சம்பந்தமான நம்பகத் தரமான உண்மை இல்லை என்றே பலரும் நினைத்தனர்.

இந்த சூழ்நிலையில், இது சம்பந்தமான பிரபல நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகிய வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த மாநிலத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த மக்களின் மொத்த தொகையும் அம்மாநில அரசை ஒரு இணையதளத்தை திறந்து பதிவு செய்யக் கோரியது.

Also Read: PACL பற்றி பல தகவல்கள் வந்தாலும்..!

பிறகு அதை பாரபட்சமின்றி அனைவருக்கும் பணத்தை திருப்பி அளித்தது. இதில் முக்கியமாக பேசப்படுவதற்கு காரணம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடி என்ற PACL சம்பந்தப்பட்ட மக்களும் அதில் பணத்தை திரும்பப் பெற்றனர்.

இந்த செய்தியை அறிந்து அனைத்து மாநிலங்களும் இது சாத்தியமாகுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. மேலும், குறிப்பாக தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் அனைவருமே தங்களின் புகாரை பதிவு செய்து வருகின்றனர்.

இருந்தபோதும் பலரின் கருத்து, இது சுப்ரீம்கோர்ட்டில் உள்ளதாகவும் அதை நம்மால் சரி செய்ய முடியாது, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் பலரும் கூரியதாகவே கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் இதற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து. பிஏசிஎல் சம்பந்தப்பட்ட நிலங்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ளன, அந்நிலங்களை தமிழக அரசு எடுத்துக் கொண்டு மக்களின் பணத்தை திரும்ப தரலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.

இந்த கருத்து PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு இடையே பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் இருந்தபோதும், பலரும் தமிழக அரசுக்கு இத்தகவலை உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் புகாரை பதிவு செய்திருக்கின்றனர்.

இன்னும் பலரும் பதிவு செய்யாமல் இருக்கின்றனர் என்றும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப்பில் பேசப்படுகிறது.

தற்போது இந்த தகவலை நோக்கமானது அனைவரும் பணம் பெற வேண்டும் என்பதே தவிர, வேறு எந்தவித கருத்தும் இல்லை என்பதை நினைவில் கொள்க.

5 thoughts on “PACL பணத்தை பெற்றது சத்தீஸ்கர் மாநிலம்..!”

  1. முதல்வர் அவர்களுக்கு
    ஐயா
    நான் கடந்த 10 வ௫ட௩்களுக்கு முன்பு பி ஏ சி எல் நிறுவனத்தில் பல லட்சம் ௫பாய் முதலீடு செய்து ள்ளன தற்போது அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றதால் தடை செய்ய பட்டு10வ௫டமாக வழக்கில் உள்ளது. அதுபோல் தமிழகத்தில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவே முதல்வர் தக்க நடவடிக்கை எடுத்து ௭௩்கள் பணத்தை மீட்டு த௫மாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

    Reply
  2. அய்யா இன்றைய தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே பி ஏ சி எல் கம்பெனியில் பணம் கட்டிய ஏழை எளிய அன்றாட வியர்வை சிந்தி கூலி வேலை செய்பவர்கள் மட்டுமே தனது பிள்ளைகளின் வருங்கால வாழ்வாதரம் கல்வி திருமணம் வீடு கட்டுதல் இதற்காக சேமிப்பின் அடிப்படையில் ஒல்வொருவரும் PACL LIMITED கம்பெனியில் முதலீடு செய்தார்கள் தவிர வேறு பணக்காரர் ஆகிவிடலாம் என்ற நோக்கம் அல்ல ஆகையால் தயவு கூர்ந்து இரு கை கூப்பி முதல்வரை வணங்கி எங்களின் வாழ்வாதாரம் என்னி விரைவில் பணம் வழங்கிட அன்போடு முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்

    Reply
  3. I need my and customers saving fund in pacl.pls.take necessary steps
    Need pacl refund to all TN people by venkatesan D.
    Cell.9443686130

    Reply

Leave a Comment