PACL-லில் புதிய அறிவுப்பு வெளியிட்ட செபி

PACL-லில் நீண்ட நாட்களாக எந்த தகவலும் வராத நிலையில், தற்போது செபி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த அறிவிப்பு செபி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறது, அதாவது PACL களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஒரு வலைதளத்தை செபி திரந்தது, அதன் மூலமே மக்களின் பணத்தை திருப்பிதரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

மக்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அவ்வப்போது அந்த வலைதளம் மூலமாக செபி அறிவித்து வருகிறது, தற்போது பத்தாயிரம் வரை மக்களுக்கு பணம் வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்ட நிலையில், நிறைய நபர்களுக்கு தங்களுடைய தொகை இன்னும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை உணர்ந்த செபி மறுபடியும் தனது வலைத்தளத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அந்த மாற்றங்களின் அடிப்படையில் பணம் வராதவர்களின் தகவல்கள் ஏதேனும் தவறு இருக்கக்கூடும் என்று நோக்கத்தோடு பார்த்த செபி, அவர்களின் தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் செபியின் இணையதளம் திறந்ததால் பல நபர்கள் இணைய தளத்தை பார்வையிட்டு தங்கள் பணம் வராததன் காரணத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஆகவே உங்களுடைய பிஎசிஎல் பணமும் 10000 அளவில் இருந்தால் நீங்கள் PACLலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்களுடைய பாலிசி எண்ணை உள்ளிட்டு உங்களின் பணம் வரவு நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும், நீங்கள் பணத்திற்க்காக பதிவு செய்திருந்தால்.

2 thoughts on “PACL-லில் புதிய அறிவுப்பு வெளியிட்ட செபி”

Leave a Comment