PACL ஆவணங்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்

சமீபகாலமாக PACL ஒரிஜினல் ஆவணங்களை செபி அலுவலகத்துக்கு அனுப்புமாறு அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் செய்தி வருகின்றது, இந்த செய்தியானது பிஎசிஎல் வலைதளத்தில் தங்கள் பணத்தை கோரி விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் வந்து கொண்டிருக்கிறது.

இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், தங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் தான் மக்களிடையே நிலவுகின்றது. இது அனைத்து மாநில மக்களிடையே நிலவினாலும், இதற்கான சரியான பதிலை தருபவர்கள் யாருமில்லை.

Read More: PACL நிலப்பதிவில் தவறு

பிஏசிஎல் நிறுவனமானது சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செபியால் முடக்கப்பட்டு, அதற்கான கேஸ் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் செபியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்ட வாறே இருக்கின்றது, அதை அவ்வப்போது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இது சம்பந்தமான தகவல்களும் அனைத்து மொழிகளிலும் பதிவேற்றப்பட்டு வருகின்றது, இருந்தாலும் தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவலில் தான் மக்களுக்கு அதிக குழப்பம் ஏற்பட்டுள்ளது, தங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பி வைத்து விட்டால் நம்மிடம் வேறு எந்த ஆதாரமும் இருக்காது என்ற குழப்பம் அனைவருக்கும் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஆவணங்களை தரக்கூடாது

இந்த கட்டத்தில் தற்போது jan lok pratishthanனைச் சேர்ந்த சுனந்தா கதம் அவர்கள் இது சம்பந்தமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார், அந்த வீடியோவில் அவர் கூறுவதாவது, பிஏசிஎல் சம்பந்தமான ஆவணங்களை செபி மக்களிடமிருந்து கேட்பது தவறு, இதுவரை 10 ஆயிரத்திற்கும் குறைவான தொகையை அனைவருக்கும் தரப்படாத நிலையில் ஒரிஜினல் ஆவணங்களை கேட்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அவர்கள் இது பற்றி பேசும்போது, மக்கள் தங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை செபியிடம் கொடுத்து விட்டால் அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கும் என்று கேள்வி கேட்டார், மேலும் இது சம்பந்தமாக விவாதிப்பதற்காக செபியிடம் கலந்துரையாடலுக்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார், ஆனால் சிபியிடம் கலந்து பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

UseFul: PACL தமிழ் டெலிகிராம் குரூப்

இருந்தபோதும் மக்களிடையே பேச ஆர்வப்பட்ட அவர், தனது பேஸ்புக் பேஜில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார், சுனந்தா கதம் என்பவர் மக்களின் PACL பணத்தை மீட்டெடுக்க உதவுவதற்காக பல வருடங்களாக போராடி வருகிறார், இவர் அந்த வீடியோவில் கூறும்போது, மக்கள் ஒரிஜினல் ஆவணங்களை எப்போதும் யாரிடமும் கொடுக்கக் கூடாது, அவ்வாறு கொடுத்தால் நம்மிடம் வேறு எந்த ஆதாரமும் இருக்காது, 10,000 வரை பணம் பதிவு பதிவு செய்தவர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாக கூறி சிபி இதுவரை அதை முழுமையாக தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு உங்கள் ஒரிஜினல் ஆவணங்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம், இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டும், இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்ததோடு, தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் வேண்டுமென்றால் உங்கள் ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பலாம், அதற்கு முழுப்பொறுப்பு நீங்களாகவே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்றால் வருங்காலத்தில் நம்மிடம் எந்த ஆதாரமும் இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார், இருந்தாலும் அனைத்து மாநிலத்திலும் இதற்கான எதிரொலி கிளம்பியுள்ளது, உதாரணமாக அனைவருமே இது சம்பந்தமாக குழப்பத்தில் தான் இருக்கின்றார்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் இந்த நிலையில் என்பதைக் கீழே கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள், அதோடு இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து மற்றவர்களின் குழப்பத்தையும் கலைந்தெரியுங்கள்.

10 thoughts on “PACL ஆவணங்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்”

  1. நான் இன்னும் எதையும் அனுப்பவில்லை சார்

    Reply
  2. Ok Mohan. சரியான நேரத்தில் பயனுள்ள தகவலை பகிர்ந்துள்ளீர்கள்.தங்களின் PACL பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளோம்

    Reply
  3. Acknowledgement மட்டுமே வைத்திருக்கும் நபர்களுக்கு என்ன வழி என்பதை செபியிடமிருந்து பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    Reply
  4. Sir vanakkam nangal ennum pahtharam ethuvum ana ppavellai sebi payathtai custtomer and agentukkum urvakki ullathu sir thankyou

    Reply
  5. பாண்டு மட்டுமே நம்முடைய ஆதாரம் அதையும் செபியிடம் அனுப்பி வைத்தபின்னும் பணம் வரவில்லை எனில் யாரிடம் கேட்க

    Reply
  6. செபி சொல்லித்தான் ஆன்லைனில் பதிவு செய்தோம்.ஆனால் இப்பொழுது அவர்கள் கேட்கும் ஆதாரம் கொடுத்துதான் ஆகவேண்டும் .கொடுக்கவில்லை என்றால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் மட்டுமே

    Reply
  7. How it is possible we have to send original documents to SEBI in future with out any document how we have to get money From PACL

    Reply
  8. இன்னும் ஒறிஜினல் என்கிட்ட தான் இருக்கு எனக்கு பணம் வரதுக்கு என்ன வழி சொல்லுங்க,

    Reply
  9. Yezutha padika theriyathavanga than PACL .athigama irukkanga yeppudi yenna panrayunu onnum puriyala antha antha mavattangalile office poda solli sebi ku valiurutha vaendumga sir🙏🙏

    Reply
  10. வணக்கம் சாா் ஏழ்மையான குடும்பத்தில் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருப்பவர்கள் 1000 நபா்களுக்கு மேல் கிட்டதட்ட 1 கோடி ரூபாய்க்கு மேல் சிறுக சிறுக சேமித்த பணத்தை எப்படியாவது திரும்ப கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

    Reply

Leave a Comment