உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ‘PACL’ திட்டம்

Chief Minister scheme in PACL: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

PACL சம்பந்தப்பட்ட அனைவருமே ஒரே சமயத்தில் பிஏசிஎல் பிரச்சினையை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏசியில் வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்து சில தொகுதிகளில் முதல்கட்டமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, அவை அனைத்துமே கணினியில் ஏற்றப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

Chief Minister scheme in your constituency PACL
Chief Minister scheme in your constituency PACL

பிறகு அந்த புகாரை பரிசீலித்து அதற்கான தீர்வை வழங்க தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது. இப்படி பட்ட சூழ்நிலையில் பிஏசிஎல் பணத்தை இழந்து தவிக்கும் மக்கள் தமிழகம் முழுக்க உள்ளனர்.

எனவே அனைவருமே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் உங்கள் புகாரை பதிவு செய்வதே மிக அவசியமாகும்.

உங்கள் புகாரை பதிவு செய்யும்போது பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களையும் மற்றும் உங்கள் பகுதியில் இயங்கிவந்த பிஏசிஎல் கிளையின் விலாசத்தையும் அளித்தல் அவசியம்.

மேலும் பிஎசிஎல் சம்பந்தப்பட்ட சில பிரச்சனை கூறி தகவலையும் தெரிவித்தல் நல்லது, நீங்கள் அளிக்கும் புகாரின் பேரில் நாம் படும் துன்பங்கள் அனைத்தையுமே எடுத்துரைப்பது உசிதமாகும்.

இதன் மூலம் நிச்சயம் ஒரு நல்ல வழி பிறக்கும் என நம்பப்படுகிறது. நான் எனது தொகுதியில் இதை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் நீங்களும் உங்கள் தொகுதியில் இதை செய்ய தவறாதீர்கள்.

நமக்கு கிடைக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்றும் சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மையாகும்.

PACL-லில் பணம் இழந்த மக்களுக்கு கிடைக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்ற அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்க தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களின் குறைகளை தீர்க்க உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தையும் உபயோகப்படுத்தி நமது புகார்களை பதிவு செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆகையால் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பிஏசிஎல் புகாரை மிகத் தெளிவாக பதிவு செய்ய தவறாதீர்கள்.

26 thoughts on “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ‘PACL’ திட்டம்”

    • ஐயா நான் ராஜம்மாள் .கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கொசுவமடை கிராமத்தில் வசித்துவரிகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என்னால் வேலை செல்ல முடியவில்லை. பிஏசிஎல் பணம் கட்டியிருக்கிறேன்.தொகையை மிட்டுதருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

      Reply
  1. நான் பிஏசி எல் ஏஜெண்ட் நான் பல வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று அந்த கம்பெனியில் கட்டி உள்ளேன் வாடிக்கையாளர் களிமண் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன் agent no.1850058515 நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தாருங்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்

    Reply
    • அலுவலகம் இருந்த இடம் திருநெல்வேலிமாவட்டம் திருநெல்வேலி

      Reply
  2. Ofline முறையில் பணத்தை வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்

    Reply
  3. ஐயா நான் 5 ஆண்டு PACL நிறுவனத்தில் முகவராக பணிபுந்தேன் சுமார் 100நபருக்குமேல் முதலீடு செய்து உள்ளனர் பாலிசி காலம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் பணம் திரும்ப கிடைக்கவில்லை காரணம் இந்த நிறுவனம் தடைசெய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் எங்கள் பணத்தை எங்களுக்கு திரும்ப பெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    Reply
  4. மதிப்பிற்குரிய அண்ணன் தளபதி ஐயா அவர்களுக்கு,
    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் வசித்து வருகிறேன்.நாங்கள் அனைவரும் pacl பணத்தினால் நிறைய கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறோம்.நீங்கள் இதில்
    இருந்து உடனடியாக விளக்கு அழிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.இதே போல் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்

    Reply
  5. ஐயா வணக்கம் நான் பிஏசில் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் ஏஜன்டாக பணியாற்றிவந்தேன் தற்போது இந்த நிறுவனம் செபியின் நடவடிக்கைகளினால் முடக்கப்பட்டது இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணம் கட்டிய மக்களுக்கு திரும்ப கிடைக்காமல் மிகவும் துன்பபடுகின்றனர் எனவே தாங்கள் இந்த பணத்தை மக்களுக்கு விரைவில் கிடைக்க செய்யுங்கள் நன்றி

    Reply
  6. ஐயா நான்pacl பணம் கட்டி 5 வருடமாகிறது இதுவரை என்னுடைய பணம் 1.50000/திருப்பி தராமல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது இதனால் இந்த செய்தின் மூலம் ஏதேனும் உதா விடாமுடிந்தால் உதவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு எ. அன்பரசு

    Reply
  7. நான் ஏஜண்டாக குமரிக்கண்டம் நெய்யூர் பகுதியில் பணிபுரிந்தேன். என்னை நம்பி அநேகன் பாலிசி கொடுத்தார்கள் அனால் இந்த நிலை வரும் என யாரும் நினைக்க வில்லை எல்லாரின் பணத்தை மீட்க தாழ்மையுடன் முதலமைச்சர் ஐயாவை வேண்டுகிறேன் . 9751669751

    Reply
  8. நான் பி ஏ சி எல்லில் ஏஜென்ட் ஆக உள்ளேன் பலருடைய வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்ப பெற முடியாமல் பல இன்னல்களில் சிக்கி உள்ளேன். பணத்தை பெற்று தருமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

    Reply
    • ஐயா வணக்கம்.நான் முன்னாள் இராணுவ வீரர்.நான் ஐந்து வருடங்கள் PACL ல் முகவராக பணிசெய்து 100 பேர்களை உறுப்பினர்கள் சேர்ந்து பணம் கட்டி வந்தோம்.sebi கம்பெனியை முடக்கி விட்டு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து ம் பணம் கிடைக்கவில்லை.லோதா கமிட்டி அமைத்து பணம் கொடுத்து விடுவோம் என்று சொன்னார் கள்.இதுவரை கிடைக்க வில்லை.தயவுசெய்து பணம் திரும்ப கிடைக்கவும் பணம் கட்டிய கிளைமூலம் கொடுக்க ஏற்பாடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.இவண் குருநாதன்.க சில்லமரத்துபட்டி,போடி தாலுகா,தேனி_மாவட்டம், தமிழ் நாடு.செல்_9585948455.

      Reply
  9. Dear CM sir,,
    Kindly to make arrangement for PAcl depositor amount return…….pls my dad ..mother and my relatives also deposit pacl ..in this lockdown time …we are not lead the without money life …. pls consider the ordinary people problem …..pls rectifying the issue thanq

    Reply
  10. Dear cm, iam gunasekar.a iam a agent of PACL. Iam and our relative’s and friends are invest a money in this PACL by trusting me.so i have faced lot of problem .i this corona situation this PACL moneys will helpus to run a family .so plz consider our critical situation plz make our funds released sir .we trusting you for the PACL money .thank you

    Reply
  11. ஐயா நானும் ஒரு முகவராக பிஏசிஎல் லில் பணி செய்தேன் தற்போது என்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு என்னால் பதில் கூற இயலவில்லை எனவே தற்போது செபி மேற்பார்வையில் உள்ள எங்களது பணத்தை நாங்கள் திரும்ப பெற எங்களுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஐயாவிடம் வேண்டுகிறோம்
    நன்றி

    Reply
  12. ஐயா என் பெயர் கிரிஜா ராஜீ
    நான் பி ஏ சி எல் ஐந்து அரை வருட
    ஸ்கீமில் பணம் கட்டி இருக்கிறேன்
    எனக்கு நான் கட்டிய பணத்தை மீட்டு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    Reply
  13. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம் ஐயா நான் pacl கம்பெனியில் முகவராக உள்ளேன் நான் பல வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்து பல லட்ச ரூபாய் காட்டியுள்ளேன் கடந்த ஏழு ஆண்டுகளாக பணம் கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் தாங்கள் தலையிட்டு மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்குங்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

    Reply
  14. Dear. CM sir.kindly to arrangements pacl amount refund ted TamilNadu state.S.Kausalya.K.malayandipattinam.pollachi.

    Reply
  15. ஐயா வணக்கம் நான் பிஏசில் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் ஏஜன்டாக பணியாற்றிவந்தேன் தற்போது இந்த நிறுவனம் செபியின் நடவடிக்கைகளினால் முடக்கப்பட்டது இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணம் கட்டிய மக்களுக்கு திரும்ப கிடைக்காமல் மிகவும் துன்பபடுகின்றனர் எனவே தாங்கள் இந்த பணத்தை மக்களுக்கு விரைவில் கிடைக்க செய்யுமாறு மிகவும் தாய்மையுடன கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி

    Reply
    Jayaprakash .v
    Thiruvallur disritc
    Poonamallee. Taluka
    Thirumazhisai
    Chennai. 600124
    May 24, 2021 at 2:15 pm
    When will you give us money.please take the action

    Reply

Leave a Comment